states

img

பிணை நிபந்தனையை மீறி மற்றுமொரு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்ற சாமியார் நரசிங்கானந்த்

ரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ள யதி நரசிங்கானந்த், பிணை நிபந்தனையை மீறும் விதமாக மற்றுமொரு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஹிமாச்சலபிரதேச மாநிலம் உனாவில், நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், இந்துக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும், இஸ்லாமியர்களை குறிவைத்து கொல்லப்பட்ட வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சத்யதேவ சரஸ்வதி, “இது ஒரு தனியார் நிகழ்ச்சி. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

எங்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். நாங்கள் இங்கு உண்மையை பேசுகிறோம். வெறுப்பு பேச்சு எதையும் பேசவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் ஹரித்துவாரில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்யப்பட்டிருந்த யதி நரசிங்கானந்த்  பிப்ரவரி 18 தேதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று நிபந்தனையில் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உனாவில் கலந்துகொண்ட சாத்வி அன்னபூர்ணா உள்ளிட்டவர் வெறுப்பு பேச்சுக்களை பேசியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துமாறு மீண்டும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், சாத்வி அன்னபூர்ணாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பிணை நிபந்தனையை மீறி மற்றுமொரு வெறுப்பு பேச்சு நிகழ்ச்சியில் நரசிங்கானந்த் கலந்து கொண்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.